டி.ஜி.பி.,யானார் திலகவதி

சென்னை : கூடுதல் டி.ஜி.பி., திலகவதிக்கு பதவி உயர்வு அளிக்கப்பட்டுள்ளது.இது தொடர்பாக, தமிழக அரசின் உள்துறை முதன்மை செயலர் ஞானதேசிகன் பிறப்பித்துள்ள உத்தரவு:பொருளாதார குற்றத் தடுப்புப் பிரிவின் கூடுதல் டி.ஜி.பி.,யாக பணியாற்றி வரும் திலகவதிக்கு டி.ஜி.பி.,யாக பதவி உயர்வு அளிக்கப்பட்டுள்ளது. இவர், தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வாணையத் தலைவராக நியமிக்கப்பட்டு உள்ளார். இந்த உத்தரவு உடனடியாக அமலுக்கு வருகிறது.இவ்வாறு ஞானதேசிகன் குறிப்பிட்டுள்ளார்.

Post a Comment

0 Comments