ஜாதி கணக்கெடுப்பு:பாதல் கடும் எதிர்ப்பு


சண்டிகார்:ஜாதி அடிப்படையிலான மக்கள் தொகை கணக்கெடுப்புக்கு பஞ்சாப் முதல்வர் பிரகாஷ் சிங் பாதல் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.



பஞ்சாப் முதல்வர் பிரகாஷ் சிங் பாதல் கூறியதாவது:மக்கள் தொகை கணக்கெடுப்பின்போது, ஜாதியையும் சேர்த்து கணக்கெடுப்பது என்பது சரியான நடவடிக்கை அல்ல. உலகத்தில் உள்ள அனைத்து மதங்களும், ஜாதிகளும் சமமானவை என, சீக்கிய மத குருக்கள் போதித்துள்ளனர்.எனவே, ஜாதி அடிப்படையிலான மக்கள் தொகை கணக்கெடுப்பை நாங்கள் எதிர்க்கிறோம். நாட்டின் வளர்ச்சிக்காக அனைத்து தரப்பு மக்களும் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும் என, விரும்புகிறோம்.



ஜாதி அடிப்படையிலான கணக் கெடுப்பு தேவையற்ற பிரச்னைகளுக்கு வழி வகுக்கும்.இவ்வாறு பிரகாஷ் சிங் பாதல் கூறினார்.தே.ஜ., கூட்டணியில் அங்கம் வகிக்கும் பா.ஜ., ஜாதி அடிப்படையிலான மக்கள் தொகை கணக்கெடுப்புக்கு ஆதரவு தெரிவித்துள்ள நிலையில், அதே கூட்டணியில் உள்ள சிரோமணி அகாலி தளம் கட்சி, அதற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளது, பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Post a Comment

0 Comments