இன்னும் இருக்கிறது என்னிடம்..

இன்னும் இருக்கிறது என்னிடம்
உனக்கென தருவதற்கு..

சிரிக்கும் கரடி பொம்மை,
சிவப்பு உடை,
கருப்பு கொடை,
வெள்ளை காலனி,
மூன்று இதழ் பூ,
ஈரமில்லா முத்தம்...

இவை யாவும் தந்த பின்னும்
இன்னும் இருக்கிறது என்னிடம்
உனக்கென தருவதற்கு...

கிரகனத்து வைர மோதிரம்,
வான வில்லின் பாதி வளையல்,
நட்சத்திரங்களின் பூ மாலை,
இரு பிறை கம்மல்,
தேவதைகளின் சிறகுகள்,
இவை யாவும் தந்த பின்னும்

இன்னமும் இருக்கிறது என்னிடம்
உன்னிடம் தருவதற்கு...

-- வெங்கடேஷ் பாபு

Post a Comment

0 Comments