Merkku Thodarchi Mala | Naatpadu Theral – 03 | Vairamuthu | Anthony Daasan | Kathiravan

 ஒரு மண்ணுக்கும் படைப்பாளனுக்குமான விட்டுப்போகாத சொந்தமும் அற்றுப்போகாத பந்தமும்...

மேற்குத் தொடர்ச்சி மல இளைச்சுப் போகும் – அந்த மேகாத்து மேல்மூச்சு வாங்கிப் போகும் மாசம் ஒருவாட்டி – நான் வடுகபட்டி போகாட்டி வலது கைநீட்டி – நான் மலையோட பேசாட்டி * வைகை நதிமேல – என் வலதுகை நனைக்காம வைகையில வெளையாடும் வாளமீனு தூங்காது பூமரத்துக் கீழ – நான் புதுப்பாட்டு எழுதாம பூமரத்தில் கூடுகட்டும் புறா இரை கொள்ளாது கத்தாழங் காடு – எங் கால்சூடு காங்காமக் கத்தாழம் புதரோட காடைமுட்டை போடாது மஞ்சளாறு அணையில் – நான் மலைக்காத்து வாங்காம மஞ்சளாத்து மூலையில மணிக்குருவி மேயாது மலையைக் கொஞ்சம் கடிச்சுக் கிட்டே கூழ்குடிச்ச பூமியடா! மண்ணும் மழையும் – எங்க பரம்பரைக்கே சாமியடா! * கும்பக்கரைச் சாலையில கோமிய வாசம் புடிக்காம மண்டக்குள்ள மல்லுக்கட்டி மல்லியப்பூப் பூக்காது கெடையாட்டு மந்தையில கெடாக் கூத்துக் காங்காம காஞ்சுபோன பொழப்புக்குள்ள கற்பனையே கெளம்பாது சாதிசனம் பேசும் – மொழிச் சங்கீதம் கேளாம இதிகாச எழுத்துக்குச் சகவாசம் இருக்காது சுட்ட மீன் கவுச்சி – வந்து சுர்ருன்னு ஏறாம எண்சீர் விருத்தத்தில் ஏழாஞ்சீர் வாராது மலையைக் கொஞ்சம் கடிச்சுக் கிட்டே கூழ்குடிச்ச பூமியடா! மண்ணும் மழையும் – எங்க பரம்பரைக்கே சாமியடா ***



Post a Comment

0 Comments