வாய்ப்பை பயன்படுத்துங்கள் ராஜபக்ஷேவுக்கு ஒபாமா அட்வைஸ்


கொழும்பு:"போரால் ஏற்பட்ட பாதிப்பை சீரமைக்க, தற்போது கிடைத்துள்ள வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ள வேண்டும்' என, இலங்கை அதிபர் ராஜபக்ஷேவுக்கு, அமெரிக்க அதிபர் ஒபாமா வேண்டுகோள் விடுத்துள்ளார்.அமெரிக்க அதிபர் ஒபாமா, இலங்கை அதிபர் ராஜபக்ஷேவுக்கு விடுத்துள்ள சுதந்திர தின வாழ்த்துச் செய்தியில் கூறப்பட்டுள்ளதாவது:


நீண்டகாலமாக போரால் பாதிக்கப்பட்டு வந்த இலங்கையில், தற்போது அமைதி ஏற்பட்டுள்ளது. போரால் ஏற்பட்ட பாதிப்பை சீரமைக்க, தற்போது கிடைத்துள்ள வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.

சகிப்பு தன்மை, மனித உரிமைகளுக்கான மரியாதை, நம்பகத் தன்மை, சட்டம் ஒழுங்கு, பத்திரிகை சுதந்திரம் போன்ற வழிகளின் மூலம், இலங்கை மக்களின் அனைத்து தரப்பினரையும் அவர்களது விருப்பப்படி வாழ்வதற்கான நடவடிக்கைகள் எடுக்க வேண்டும்.இலங்கையும், அமெரிக்காவும் பல ஆண்டுகளாக நட்பு நாடுகளாக உள்ளன. இலங்கையில் அமைதியான சூழல் தொடர வாழ்த்துகிறேன்.இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Post a Comment

0 Comments