தமிழ் வழியில் பொறியியல் படிப்பு அடுத்த ஆண்டு அமல்

சென்னை:""தமிழ் வழியிலான பொறியியல் படிப்பு, அடுத்த ஆண்டு அமல்படுத்தப்படும்,'' என்று உயர்கல்வித் துறை அமைச்சர் பொன்முடி அறிவித்தார்.இது குறித்து, நிருபர்களிடம் அமைச்சர் கூறியதாவது:பொறியியல் படிப்பை, மாணவர்கள் தமிழ் வழியில் படிப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. அடுத்த ஆண்டு, இந்த திட்டம் அமலுக்கு வரும்.

இந்த திட்டம் முதலில், பல்கலைக் கல்லூரிகள் மற்றும் பாலிடெக்னிக்குகளில் அமல்படுத்தப்படும். இது தொடர்பாக விவாதிக்க, சென்னை அண்ணா பல்கலையில் நாளை (இன்று) காலை ஆலோசனைக் கூட்டம் நடக்கிறது. அதில், அனைத்து அண்ணா பல்கலைகளின் துணைவேந்தர்கள் கலந்து கொள்கின்றனர்.

தமிழ் வழியில் பொறியியல் படிப்புகளை வழங்குவதற்காக, ஒரு குழுவை அமைக்க திட்டமிட்டுள்ளோம். தமிழ் வழியில் பொறியியல் படிப்புகளை நடத்துவதற்கு, ஏ.ஐ.சி.டி.இ., அனுமதி தேவையில்லை. எனவே, திட்டமிட்டபடி தமிழ் வழியில் பொறியியல் படிப்புகளை வழங்குவோம்.இவ்வாறு அமைச்சர் பொன்முடி கூறினார்.

Post a Comment

0 Comments