மட்டக்களப்பில் தமிழர்களுக்கு இலங்கை ராணுவம் மிரட்டல்

கொழும்பு, ஜூலை 6- இலங்கை மட்டக்களப்பு பகுதியில் விடுதலைப் புலிகள் குறித்து ராணுவத்துக்கு தகவல் தரவில்லையென்றால் கடுமையாக தண்டிக்கப்படுவீர் என்று அப்பகுதியைச் சேர்ந்த தமிழர்களை ராணுவத்தினர் மிரட்டியதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

கடுக்காமுனை மற்றும் அம்பிலான்துறை ஆகிய இடங்களில் சாலைகளைக் கடந்து சென்ற தமிழர்களை ராணுவத்தினர் திடீரென பிடித்து வைத்துக் கொண்டதாகவும், பின்னர் பல மணி நேரத்திற்குப் பிறகு அவர்களை விடுவித்ததாகவும் இலங்கைத் தமிழ் இணையதளங்களில் செய்தி வெளியாகியுள்ளது.

"விடுதலைப் புலிகள் யாராவது வந்தால் உடனே எங்களுக்குச் சொல்ல வேண்டும். இல்லையென்றால் என்ன நடக்கும் என்பது உங்களுக்கே தெரியும்" என்று மட்டக்களப்பு தமிழர்களை ராணுவத்தினர் மிரட்டுவதாகவும் அந்த இணையதளங்களில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Post a Comment

0 Comments