எல்லைதாண்டும் சிங்கள மீனவர்கள்: நல்லகண்ணு

தமிழக மீனவர்கள் எல்லை தாண்டுவதில்லை. சிங்கள மீனவர்கள்தான் எல்லைதாண்டுகிறார்கள் என, நல்லகண்ணு இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மூத்த தலைவர் நல்லகண்ணு தெரிவித்தார்.



இதுகுறித்து தூத்துக்குடி, ஸ்ரீவைகுண்டத்தில் அவர் கூறியதாவது,



எல்லை தாண்டிச் செல்லும் தமிழக மீனவர்களை காக்க முடியாது என மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் எஸ்.எம். கிருஷ்ணா கூறியுள்ளது கண்டிக்கத்தக்கது.

தமிழக மீனவர்கள் எல்லை தாண்டுவதில்லை. மாறாக, சிங்கள கடற்படைதான் நாகை, கோடியக்கரை


உள்ளிட்ட இடங்களில் நமது நாட்டு கடல் பகுதிக்குள் வந்து நமது மீனவர்களை தாக்குகிறது. சிங்கள மீனவர்கள் மீதுதான் தவறு உள்ளது.



தமிழகத்தில் மின்பற்றாக்குறை தீர இன்னும் இரண்டு ஆண்டுகள் ஆகும் என மின்துறை அமைச்சர் ஆற்காடு வீராசாமி தெரிவித்துள்ள நிலையில், விவசாயிகளுக்கு இலவச பம்ப்செட் வழங்கப்படுமென முதல்வர் கருணாநிதி அறிவித்துள்ளது குறிப்பிடதக்கது என்றார்.

Post a Comment

0 Comments