சீமானாகிய (தமிழனாகிய) நான்!!!

சீமானாகிய (தமிழனாகிய) நான்!!! நாவலர் நெடுச்செழியனை தம்பி வா தலைமையேற்க வா என்றுஅழைத்தார் அறிஞர் அண்ணா.ஆனால் நாவலர் தொடர்ந்து தி மு க மற்றும் அதிமுகவில் இரண்டாம் இடத்தில இருந்து முன்னேறமுடியவில்லை .நாவலர்க்கு திறமை இல்லையா ? அரசியல் அனுபவம் இல்லையா ? அனைத்தும் இருந்தும் அவரால் ஏன திமுக மற்றும் அதிமுகவின் தலைமை ஏற்க முடியவில்லை ? தலைமை என்பது மிகவும் வலிமையானது யாரும் யாருக்கும் கையளிக்க முடியாது அது அறிஞர் அண்ணாவால் கூட முடியவில்லை. தமிழன் தலைமை இடத்துக்கு வருவது எளிதான விடயம் அல்ல. தொடர்ந்து பல தடைகளை ஏற்படுத்துவார்கள். எள்ளி ஏளனம் செயவார்கள்.ஓ பன்னீர்செல்வம் மற்றும் எடப்பாடி பழனிசாமி அவர்கள் தமிழ் நாட்டின் முதல்வர் மற்றும் துணை முதல்வர் பதிவியை அடைந்த பின்பும் எப்படியெல்லாம் கேலிகளுக்கும் ஏளனங்களுக்கும் ஆளானார்கள் என்பதை தமிழ் பிள்ளைகள் நினைவில் கொள்ளவேண்டும். அரசியல் துறை மட்டும் அல்ல விளையாட்டு கல்வி வானவியல் பொருளாதாரம் அடங்கிய அணைத்து துறைகளிலும் தமிழனாகிய நான் முன்னேறவேண்டும் என்று உறுதியேற்போம். சீமான் அண்ணன் சொல்வது போல் நாம் தமிழர் என்பது ஒரு அரசியல் கட்சி மட்டும் அல்ல அது உலக தமிழர்களின் அடையாளம் . திமுகவிடம் நாம் கற்க வேண்டியது அவர்களின் இன்ன பற்று இல்லாத திராவிடத்தை தமிழர்களிடம் புகுத்தி தமிழ் இனத்தின் தலைவர்களாக வலம்வருவதை கடந்த 50 வருடமாக பார்த்து கொண்டுதான் இருக்கிறோம் ஆகையால் இனஉணர்வுகொள்வோம் தமிழர்களாக இணைவோம் !!!! சீமானாகிய நான் என்று கோட்டை கொத்தளங்களில் ஓங்கி ஒளிக்கும் நாள் வெகுதூரமில்லை.அதுவரையில் ஒவ்வொரு தமிழனின் நெஞ்சத்தில் சீமானாகிய நான் என்னும் ஒளி தமிழனாகிய நான் என்று ஓங்கி ஒளிக்கட்டும் ....!!!!!

Post a Comment

0 Comments