அந்தமானில் திருவள்ளுவர் சிலை

அந்தமானில், ஆறரை அடி உயர திருவள்ளுவர் சிலை திறக்கப்படவுள்ளது; மத்திய அமைச்சர் நெப்போலியன், சிலையை திறக்கவுள்ளார். கன்னியாகுமரியில் பிரம்மாண்டமான திருவள்ளுவர் சிலை நிறுவப் பட்டுள்ள நிலையில், அந்தமான் நிக்கோபார் தீவுகளிலும், திருவள்ளுவருக்கு சிலை அமைக்க முடிவு செய்யப்பட்டது. இதற்கான ஏற்பாடுகளை அங்குள்ள உலக தமிழ்ச் சங்கம் மற்றும் அந்தமான் தமிழர் சங்கமும் இணைந்து செய்துள் ளது. அந்தமானில் உள்ள துறைமுக பூங்காவில், ஆறரை அடி உயரத்தில் திருவள்ளுவர் சிலை அமைக்க, முன்னேற் பாடுகள் செய்யப் பட்டுள் ளன. இச்சிலையை, மத்திய சமூகநீதி மற் றும் மேம்பாட்டுத் துறை அமைச்சர் நெப்போலியன், வரும் 7ம் தேதி திறந்து வைக்கவுள்ளார்.

Post a Comment

0 Comments