தமிழக மீனவர்களை நிர்வாணமாக்கி பாலியல் கொடுமை

ராமநாதபுரம் : தமிழக மீனவர்களை நிர்வாணமாக்கி இலங்கை கடற்படையினர் , இரவு முழுவதும் பாலியல் கொடுமை செய்து விரட்டியடித்தனர். நேற்று முன்தினம் இரவு 7 மணிக்கு ராமேஸ்வரம் அருகே இந்திய கடலோர பகுதியில் நூற்றுக்கணக்கான தமிழக மீனவர்களின் படகுகள் மீன்பிடித்து கொண்டிருந்தன. அப்போது அங்கு 15 காஸ் படகுகளில் வந்த இலங்கை கடற்படையினர், மீனவர்களை சுற்றிவளைத்தனர். சிலர் சுதாரித்து தப்பினர். கையில் சிக்கியவர்களை ஆடைகளை கழற்ற கூறி, இரவு முழுவதும் பாலியல் கொடுமை செய்துள்ளனர். ""மீன்பிடிக்க வந்தால் இனிமேல் உங்களை அடிக்க போவதில்லை, இது போல நிர்வாண தண்டனை தான்'' எனக்கூறி சென்றதாக தப்பி வந்த மீனவர்கள் கூறினர்.

மீனவர் மாசிலாமணி(70) கதறியவாறு கூறுகையில், ""சுற்றி வளைத்த இலங்கை கடற்படை எங்களிடம் இருந்த பொருட்களை எல்லாம் பறித்து கொண்டது. எனது 190 ரூபாய், செருப்பு, டார்ச் லைட் ஆகியவை பறிபோனது. எங்களிடம் உறவு முறைகளை கேட்டனர். பின் பாலியல் கொடுமை செய்தனர். வயது வித்தியாசம் கூட பார்க்கவில்லை,'' என்றார்.

படகின் டிரைவர் அலெக்சாண்டர் கூறுகையில், ""இந்திய கடற்பகுதியில் தான் மீன்பிடித்து கொண்டிருந்தோம். அவர்களது நாட்டில் வருவது போல இலங்கை கடற்படை வந்து அட்டகாசம் செய்கின்றனர்,'' என்றார்.

Post a Comment

0 Comments