பொன்சேகாவை உயிருடன் புதைக்க மயானம் தேவை: இலங்கை அமைச்சர்

கொழும்பு, ஜூலை 6- சரத் பொன்சேகாவை உயிருடன் புதைக்க மயானம் தேவை என்று இலங்கை நாடாளுமன்றத்தில் அமைச்சர் மேர்வின் சில்வா பேசியதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. நாடாளுமன்றத்தில் பட்ஜெட் மீதான விவாதத்தில் கலந்துகொண்டு பேசுகையில் அவர் இவ்வாறு தெரிவித்ததாக இலங்கைத் தமிழ் இணையதளங்களில் செய்தி வெளியாகியுள்ளது. "பாலியல் குற்றச்சாட்டில் ராணுவ இலட்சினை பறிக்கப்பட்டவர் பொன்சேகா. பின்னர், அவரது ஜாதகம் நன்றாக இருந்ததால் மீண்டும் பதவி கிடைத்தது. அவருக்கு தேவையானதை அதிபர் ராஜபட்ச பெற்றுக் கொடுத்தார். ஆனால், அவர் அதிபரை குற்றம்சாட்டுகிறார். எனவே, சரத் பொன்சேகாவை உயிருடன் புதைப்பதற்கான மயானத்தை அமைக்க வேண்டும். இத்தகைய மயானம் அமெரிக்காவில் ஏற்கெனவே உள்ளது." என்று அமைச்சர் மேர்வின் சில்வா பேசியதாக அந்த இணையதளங்களில் தெரிவிக்கப்பட்டுள்ளது. தினமணி

Post a Comment

0 Comments