புதிய தலைமை செயலக கட்டிடம் ஆஸ்பத்திரியாக மாறுகிறது

முந்தைய அரசு கொண்டு வந்த திட்டங்களை சீர் செய்வது நல்ல காரியம் தான், ஆனால் அதுவே முதல் வேலை என்று இருபது தான் கொடுமை. இவர்களை பாராட்டுவதா ? இல்லையா என்று புரியவில்லை ??? எப்படி ஆயினும் தலைமை செயலகத்தை புதிய கட்டத்தில் நடத்துவதே நன்றாக இருக்கும் . இதை யார் போய் அந்த அம்மாவிடம் சொல்லுவது?? ம்ம்ம் .... M .L .A கலை போலீஸ் புடிக்கவந்தால் .....ஹாஸ்பிடல் உள்ளே சென்று படுத்து கொள்ள வசதியாக இருக்குமுன்னு .....நினைச்சாரோ என்னம்மோ??? சென்னை : திமுக அரசால் பிரமாண்டமாக கட்டப்பட்ட புதிய தலைமை செயலக கட்டிடம், அரசு மருத்துவமனையாக மாற்றப்படும். அதையொட்டி கட்டப்படும் ‘பி’ பிளாக்கில் அரசு மருத்துவக் கல்லூரி தொடங்கப்படும் என்று பேரவையில் முதல்வர் ஜெயலலிதா அறிவித்தார். 110வது விதியின் கீழ் அவர் நேற்று வெளியிட்ட அறிவிப்பு: தமிழகத்தில் உள்ள அனைத்து தரப்பு மக்களும், குறிப்பாக ஏழை, எளிய மக்கள், பல்வேறு நோய்களுக்கு தரமான, உயரிய சிகிச்சையினை இலவசமாக பெறும் வகையில், “பல துறை உயர் சிறப்பு மருத்துவமனை’’ (Multi Super Specialty Hospital)ஒன்றை அமைக்க அரசு முடிவு எடுத்துள்ளது. இந்த மருத்துவமனை, சென்னை மாநகரத்தின் மையப் பகுதியான அண்ணா சாலை, ஓமந்தூரார் அரசினர் தோட்டத்தில், முந்தைய திமுக அரசால், புதிய தலைமைச் செயலகம் அமைப்பதற்காக கட்டப்பட்ட, 97,829 சதுர மீட்டர் தளப் பரப்பு கொண்ட பிளாக் ‘ஏ’ கட்டிடத்தில் அமைக்கப்படும். இந்த கட்டிடம், சட்டமன்றம் மற்றும் தலைமைச் செயலகத்தில் தற்போது உள்ள 36 துறைகளும் செயல்படுவதற்கு போதுமானதல்ல. பயன்படுத்தக்கூடிய இடம் வெகுகுறைவாக இருப்பதால், அலுவலக பயன்பாட்டிற்கு ஏற்ற வகையில் இந்தக் கட்டடம் இல்லை. மேலும் இரு வேறு கட்டிடங்களில் இருந்து தலைமைச் செயலகம் செயல்பட முடியாது என்பதாலும் சட்டமன்றமும், தலைமைச் செயலகமும் புனித ஜார்ஜ் கோட்டையில் இயங்கி வருகிறது. தற்போது, ஓமந்தூரார் அரசினர் தோட்டத்தில், பயன்படுத்தப்படாமல் உள்ள கட்டிடம், ஏழை, எளிய மக்களுக்கு பயனளிக்கும் வகையில் பயன்படுத்தப்பட வேண்டும் என்ற நோக்கத்தில், இந்த ‘பலதுறை உயர் சிறப்பு மருத்துவமனையை’ அமைக்க அரசு முடிவெடுத்துள்ளது. இந்த கட்டிடத்தில் பல துறை உயர் சிறப்பு மருத்துவமனை அமையும் வகையில் தேவையான மாற்றங்கள் செய்யப்படும். மருத்துவ வல்லுநர்கள், செவிலியர்கள், தொழில்நுட்பப் பணியாளர்கள் ஆகியோர் நியமிக்கப்பட்டு, உயர் தர மருத்துவ சிகிச்சைக்கு தேவையான நவீன உபகரணங்கள் வாங்கப்படும். இந்த மருத்துவமனை விரைவில் மக்கள் பயன்பாட்டிற்குக் கொண்டு வரப்படும். இந்த மருத்துவமனை, டெல்லியில் உள்ள ‘எய்ம்ஸ்’ மருத்துவமனைக்கு இணையான வசதிகளுடன் விளங்கும். மேலும், தற்போது கட்டப்பட்டு வரும் பிளாக் ‘பி’ கட்டிடங்களில் புதியதாக ஒரு அரசு மருத்துவக் கல்லூரியை தொடங்கவும் அரசு முடிவு எடுத்துள்ளது. இவ்வாறு ஜெயலலிதா கூறியுள்ளார்.

Post a Comment

0 Comments